விநாயகர், பத்ரகாளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

குமாரபாளையத்தில் விநாயகர், பத்ரகாளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது.

Update: 2024-03-24 13:15 GMT
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் காவேரி நகர் ஸ்ரீகற்பக விநாயகர், ஸ்ரீபத்ரகாளியம்மன்  கோவில், பரிவார தெய்வங்கள் பஞ்ச சக்தி, கருப்பண்ண சுவாமி கோவில் கும்பாபிஷேக விழா மார்ச் 21 கணபதி ஹோமத்துடன் துவங்கியது. காவேரி ஆற்றிலிருந்து தீர்த்தக்குட ஊர்வலம் நடந்தது. நான்கு கட்ட யாகசாலை நடத்தப்பட்டு,நேற்று காலை 09:00 மணியளவில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. யாகசாலை பூஜை, கும்பாபிஷேக விழாவை  ஈரோடு ஆதீனம் பாலாஜிசிவம் மற்றும் அவரது குழுவினர்கள்  நடத்தினர். இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்திருந்தனர்.
Tags:    

Similar News