குட்கா விவகாரம் தொடர்பாக திமுக எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான உரிமை மீறல்

முந்தைய சட்டமன்றத்தின் பதவிக்காலம் முடிவடைந்து விட்டதால், குட்கா விவகாரம் தொடர்பாக திமுக எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான உரிமை மீறல் நோட்டீஸ் காலாவதியாகிவிட்டது என்று தமிழக அரசு செய்தது.

Update: 2024-07-05 09:52 GMT

குட்கா 

முந்தைய சட்டமன்றத்தின் பதவிக்காலம் முடிவடைந்து விட்டதால், குட்கா விவகாரம் தொடர்பாக திமுக எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான உரிமை மீறல் நோட்டீஸ் காலாவதியாகிவிட்டது என்று தமிழக அரசு தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வாதம் செய்தனர். முந்தைய அதிமுக ஆட்சியில், கடந்த 2017 ஆம் ஆண்டு சட்டமன்றத்துக்குள் குட்கா கொண்டு சென்றதாக திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்.எல்.ஏ.க்களுக்கு எதிராக சட்டப்பேரவை உரிமைக் குழு, உரிமை மீறல் நோட்டீஸ் அனுப்பியது. முந்தைய உரிமை மீறல் குழுவின் தலைவர் என்ற முறையில் இடையீட்டு மனு தாக்கல் செய்ய உள்ளதாக பொள்ளாச்சி ஜெயராமன் சார்பில் முறையீடு செய்யப்பட்டது. இந்நிலையில், வழக்கு விசாரணை ஜூலை ஒன்பதாம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News