கல்குவாரியை நிரந்தரமாக மூடக்கோரி ஆட்சியரிடம் கிராம மக்கள் மனு

கல்குவாரியை நிரந்தரமாக மூடக்கோரியும் , புதிதாக செயல்பட உள்ள நிறுவனத்திற்கு அனுமதி வழங்கக் கூடாது என வலியுறுத்தியும் கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்

Update: 2024-03-12 02:04 GMT

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, அரசின் விதிமுறைகளை மீறி தென்பாலை கிராமத்தில் செயல்பட்டு வரும் தனியார் கல்குவாரியை நிரந்தரமாக மூடக்கோரி அக்கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் தனியார் கல்குவாரிக்கு எதிராக கண்டனம் கோஷங்களை எழுப்பினர். மேலும் தனியார் கல்லூரிக்கு புதிதாக செயல்பட உள்ள அந்நிறுவனத்திற்கு அனுமதி வழங்கக் கூடாது என்றும் கல் குவாரியால் பள்ளி குழந்தைகள் , முதியோர்கள்,கர்ப்பிணிகள் அவதிப்பட்டு வருகின்றனர். விதிமுறையை மீறி செயல்பட்டு வரும் தனியார் கல்குவாரியை ஆட்சியர் நேரில் பார்வையிட்டு சோதனை செய்து மீண்டும் அந்த நிறுவனத்தை செயல்படாமல் நிரந்தரமாக மூடி சீல் வைக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தனர். தனியார் கல்குவாரியை நிரந்தரமாக மூடக்கோரி 30க்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

Tags:    

Similar News