நான் முதல்வன் திட்ட வேலை வாய்ப்பு முகாமை ஆட்சியர் ஆய்வு

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் நான் முதல்வன் திட்ட வேலை வாய்ப்பு முகாமை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2024-03-14 22:43 GMT
சிவகாசியில் "நான் முதல்வன்" திட்ட வேலை வாய்ப்பு முகாமை நேரில் ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்...

 விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் உள்ள,அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், தனியார் வேலை வாய்ப்பு சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் சார்பில்,நான் முதல்வன் திட்டத்தின் கீழ் நடைபெறும் சிறப்பு வேலை வாய்ப்பு முகாமில்,விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட  நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன்,வேலை வாய்ப்பு முகாமிற்கு நேரில் வருகை தந்து,முகாமில் கலந்து கொண்ட நிறுவனங்கள் குறித்து ஆய்வு செய்தார்.இந்த சிறப்பு வேலை வாய்ப்பு முகாமில் பள்ளி படிப்பு முடித்தவர்கள்,தொழில்நுட்ப பயிற்சி பெற்றவர்கள் மற்றும் பட்டப்படிப்பு முடித்தவர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.முகாம் ஏற்பாடுகளை கல்லூரி பேராசிரியர்கள் ஒருங்கிணைப்பு செய்தனர்.

Tags:    

Similar News