நவ.1 ல் கிராம சபை கூட்டம் - விருதுநகர் ஆட்சியர் அறிவிப்பு

விருதுநகர் மாவட்டத்தில் வரும் நவம்பர் 1ம் தேதி கிராமசபைக் கூட்டங்கள் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

Update: 2023-10-27 16:42 GMT

கிராமசபைக் கூட்டம் - விருதுநகர் ஆட்சியர் அறிவிப்பு

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
விருதுநகர் மாவட்டத்தில் 450 கிராம ஊராட்சிகளில் உள்ளாட்சிகள் தினமான வரும் நவம்பர் 1 ம் தேதி கிராமசபைக் கூட்டம் நடைபெறும் என  மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், விருதுநகர் மாவட்டத்திற்கு உட்பட்ட 450 கிராம ஊராட்சிகளில் உள்ளாட்சிகள் தினமான 01.11.2023 அன்று கிராம சபைக் கூட்டம் நடைபெற இருப்பதாகவும், இக்கூட்டத்தில் நவம்பர் 1-ம் நாளினை தமிழகத்தில் உள்ளாட்சிகள் தினமாகக் கொண்டாடப்படும் என அறிவிப்பு செய்த தமிழக முதல்வர் அவர்களுக்கு நன்றி தெரிவித்தல்.கிராம ஊராட்சிகளில் சிறப்பாக பணிபுரிந்த ஊழியர்களை சிறப்பித்தல்,கிராம ஊராட்சிகளில் சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கும் மகளிர் சுய உதவிக் குழுக்களை கௌரவித்தல், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விவாதித்தல்,கிராம ஊராட்சிகளில் இணையவழி வீட்டுவரி / சொத்துவரி செலுத்துதல் குறித்து விவாதித்தல் உள்ளிட்ட பொருட்கள் குறித்து விவாதிக்கப்பட இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.  எனவே, வரும் நவம்பர் 1ம் தேதி நடைபெறவுள்ள கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் கேட்டுக்கொண்டுள்ளார். 
Tags:    

Similar News