வேலூரில் அதிமுகவினர் கண்டன ஆர்பாட்டம்!

வேலூரில் தமிழக அரசை கண்டித்து அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

Update: 2024-06-25 00:38 GMT

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயத்தால் நிகழ்ந்த உயிரிழப்பை கண்டித்தும், தமிழகத்தில் கள்ளச்சாராய புழக்கத்தை தடுக்க தவறிய திமுக அரசை கண்டித்தும் வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே வேலூர் புறநகர் மற்றும் மாநகர் அதிமுகவினர் சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.

கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்த சம்பவத்திற்கு தார்மீக பொறுப்பேற்றும், சட்டம் ஒழுங்கை பாதுகாக்க தவறிய முதல்வர் மு.க.ஸ்டாலின் பதவி விலக வேண்டுமென அதிமுகவினர் கண்டன கோஷங்களை எழுப்பினர். இதில் சுமார் 500 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.

Tags:    

Similar News