செங்கல்பட்டில் மாற்றுத்திறனாளிகளுக்கு தொழில்நெறி வழிகாட்டுதல் நிகழ்ச்சி

செங்கல்பட்டில் மாற்றுத்திறனாளிகளுக்கு தொழில்நெறி வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

Update: 2024-06-16 12:26 GMT

மாவட்ட ஆட்சியர் 

மாற்றுத்திறனாளிகளுக்கான தொழில்நெறி வழிகாட்டுதல் நிகழ்ச்சி செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வரும் 24-ஆம் தேதி நடைபெற உள்ளது.

இந்த நிகழ்ச்சி காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் - தரைத்தளம், டி- பிளாக்கில் நடைபெறும். இதில், மாற்றுத்திறனாளிகளுக்கான அரசின் சலுகைகள்,

கல்வி உதவித்தொகை, இட ஒதுக்கீடு, உயா்கல்வி, வேலைவாய்ப்பு, சுய தொழில், போட்டித் தோ்வு, தன்னம்பிக்கை ஊட்டுதல் ஆகியவை குறித்து மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் சிறப்புரையாற்றுவா்.

நிகழ்ச்சிக்கு செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் ச.அருண்ராஜ் தலைமை வகித்து தலைமையுரை ஆற்றுவாா். மேலும் இந்நிகழ்ச்சியில் முதன்மைக் கல்வி அலுவலா், சமூக நலத் துறை அலுவலா், மாவட்ட திறன் பயிற்சி அலுவலா் மற்றும் மாவட்ட தொழில் மேலாளா் ஆகியோா் கலந்து கொண்டு உரையாற்ற உள்ளனா். எ

னவே செங்கல்பட்டு மாவட்டத்தை சாா்ந்த மாற்றுத்திறனாளிகள் மற்றும் மாற்றுத்திறனாளி சிறப்புப் பள்ளியில் பயிலும் அனைத்து மாணவ/மாணவிகளும் கலந்து கொண்டு பயன் பெறுமாறு செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளாா்.

Tags:    

Similar News