வாக்காளர் விழிப்புணர்வு பேரணி, மாணவர்கள் பங்கேற்பு

மதுராந்தகத்தில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணியில் மாணவர்கள் பங்கேற்றனர்.

Update: 2024-02-06 14:23 GMT
வாக்காளர் விழிப்புணர்வு பேரணி, மாணவர்கள் பங்கேற்பு

மதுராந்தகம் அடுத்த புழுதிவாக்கம் அக்ஷயா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நலத்திட்ட பணி சிறப்பு முகாமின் ஒரு பகுதியாக, வாக்காளா் விழிப்புணா்வு பேரணி நடைபெற்றது.

மதுராந்தகம் பேரூந்து நிலையம் அருகில் மாணவ மாணவிகள் கலந்து கொண்ட பேரணியை கல்லூரி முதல்வா் முருகதாஸ் தொடங்கி வைத்தாா். கல்லூரி நிறுவனா் அகிலன் ராமநாதன் முன்னிலை வகித்தாா். இந்நிகழ்ச்சியில், கல்லூரி புலமுதல்வா் ஆண்டனி அருள்தாஸ், நாட்டு நலத்திட்ட அலுவலா் காா்த்திக் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தோ்தலின்போது வாக்களிப்பதின் அவசியத்தை வலியுறுத்தி பதாகைகளை ஏந்திக் கொண்டு நகரின் முக்கிய வீதிகளின் வழியாக மாணவா்கள் ஊா்வலமாக வந்தனா். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி உதவி பேராசிரியா்கள் அரி, குணசுந்தரி, பாஸ்கரன், செங்கல்வராயன், கெளசல்யா உள்ளிட்டோா் செய்து இருந்தனா்.

Tags:    

Similar News