எஸ்பி அலுவலகத்தில் வாக்களிப்பது குறித்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி

தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் 100% வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் மற்றும் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது

Update: 2024-04-12 09:50 GMT

இந்திய பாராளுமன்ற பொதுத் தேர்தல்-2024ஐ முன்னிட்டு, தருமபுரி காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் புதிய தலைமுறை நிறுவனத்தின் சார்பில் போடுங்கம்மா ஓட்டு என்ற தலைப்பில் 100 சதவீதம் பொதுமக்கள் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மகளிர் சுய உதவி குழுவினர், பள்ளி கல்லூரி மாணவ, மாணவியர்கள் சிலம்பாட்ட, ஜிம்னாஸ்டிக் மற்றும் கிராமிய குழுவினரின் கலைநிகழ்ச்சி மற்றும் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் கி.சாந்தி இஆப., துவக்கி வைத்தார்.

உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுபாதம், மாவட்ட வருவாய் அலுவலர் செ. பால்பிரின்ஸ்லி ராஜ்குமார் உள்ளிட்ட மகளிர் சுய உதவி குழுவினர், பள்ளி கல்லூரி மாணவ, மாணவியர்கள், தன்னார்வலர்கள், புதிய தலைமுறை நிறுவன பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News