தென்காசியிலிருந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் சிவகங்கை வருகை !

தென்காசியிலிருந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் சிவகங்கைக்கு வந்த நிலையில் அனைத்து கட்சியினர் பார்வையிட்டனர்.

Update: 2024-04-03 07:34 GMT

ஆட்சியர் ஆஷா அஜித்

சிவகங்கை மாவட்டம், பாராளுமன்ற பொதுத்தேர்தல் – 2024ஐ முன்னிட்டு, 31 - சிவகங்கை பாராளுமன்றத் தொகுதிக்கென, தென்காசி மாவட்டத்திலிருந்து ஒதுக்கீடு செய்யப்பட்டு, வரப்பெற்றுள்ள 816 வாக்குப்பதிவு இயந்திரங்களை, இன்று மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்தில் அமைந்துள்ள மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சேமிப்பு கிட்டங்கியில் வைக்கப்படும் நிகழ்வு, மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தலைமையில், அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி பிரமுகர்கள் மற்றும் வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் மோகனச்சந்திரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) ஜான்சன், தேர்தல் வட்டாட்சியர் மேசியாதாஸ், சிவகங்கை வட்டாட்சியர் சிவராமன் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சிகளை சார்ந்த பிரமுகர்கள், வேட்பாளர்களின் முகவர்கள், அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News