வ.உ சி. துறைமுகம் சிஎஸ்ஆர் திட்டங்கள் ஆலோசனைக் கூட்டம் !!
தூத்துக்குடியில் வ.உ சிதம்பரனார் துறைமுக ஆணைய சிஎஸ்ஆர் திட்டங்கள் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.;
By : King 24x7 Angel
Update: 2024-05-23 09:48 GMT
ஆலோசனைக் கூட்டம்
தூத்துக்குடி வ.உ சிதம்பரனார் துறைமுக ஆணைய வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் இன்று வ.உ.சிதம்பரனார் துறைமுகம் ஆணைய சமூக பொறுப்புடைமை செயல்பாடுகளின் (CSR FUND) கீழ் தூத்துக்குடி மாவட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ள வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையத்தின் தலைவர் சுசாந்த குமார் புரோஹித், தலைமையில், மாவட்ட ஆட்சித்தலைவர் கோ.லட்சுமிபதி முன்னிலையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளர் லி.மதுபாலன், வ.உசிதம்பரனார் துறைமுக ஆணையத்தின் துணைத் தலைவர் (பொ) சுரேஷ் பாபு மற்றும் துறைத் தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர்.