விருதுநகரில் காத்திருப்பு போராட்டம்

விருதுநகர் மாவட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.

Update: 2024-02-19 13:07 GMT
காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட ஊரக வளர்ச்சி அலுவலகம் முன்பு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் விருதுநகர் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.

நரிக்குடி அருகே பேருந்து நிழற்குடையில் உடைப்பு ஏற்பட்டு தாமிரபரணி குடிநீர் வீணானதால் நரிக்குடி வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜசேகரன் மற்றும் ஒன்றிய பொறியாளர் பிரபா உள்ளிட்ட அலுவலர்களை விருதுநகர் மாவட்ட ஆட்சியர் முனைவர் ஜெயசீலன் தற்காலிக பணிநீக்கம் செய்து உத்தரவிட்டார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் விருதுநகர் மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பாக மாவட்ட ஊரக வளர்ச்சி அலுவலக வளாகத்தில் அரசு ஊழியர்கள் தரையில் அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் விருதுநகர் மாவட்ட ஆட்சியருக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.

Tags:    

Similar News