சேலத்தில் பூட்டிய வீட்டுக்குள் ஆண் சடலம் கொலையா?

சேலம் களரம்பட்டியில் பூட்டிய வீட்டுக்குள் அழுகிய நிலையில் ஆண் பிணம் கிடந்தது. இறந்தவர் கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2024-03-14 04:53 GMT

மரணம்

சேலம் களரம்பட்டியில் பூட்டிய வீட்டுக்குள் அழுகிய நிலையில் ஆண் பிணம் கிடந்தது. இறந்தவர் கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சேலம் களரம்பட்டி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இருந்து நேற்று இரவு பயங்கர துர்நாற்றம் வீசியது. இதுகுறித்து கிச்சிப்பாளையம் போலீசாருக்கு உடனே தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அப்போது அந்த வீட்டின் கதவில் வெளிப்புறமாக பூட்டப்பட்டிருந்த்து. உடனே போலீசார் அந்த பூட்டை உடைத்து கொண்டு உள்ளே சென்றனர். அப்போது வீட்டுக்குள் சுமார் 40 வயதுடைய ஆண் ஒருவர் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார். அவர் இறந்து 3 நாட்களுக்கு மேல் ஆகி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. மேலும் அவர் 2 மாதத்துக்கு முன்பு தான் அந்த வீட்டுக்கு குடியேறி உள்ளார். இறந்து கிடந்தவரின் பெயர் உள்ளிட்ட விவரங்கள் குறித்து உடனடியாக தெரியவில்லை. இதுகுறித்து வீட்டின் உரிமையாளரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர். வீட்டு கதவின் வெளிப்புறமாக பூட்டப்பட்டிருந்தால் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம்? என்ற சந்தேகமும் போலீசாருக்கு எழுந்துள்ளது. அதன் அடிப்படையிலும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News