தமிழகத்தில் திமுகவுக்கு எதிா்ப்பு அலை வீசுகிறது: வைகைச் செல்வன் பேச்சு

தமிழகத்தில் திமுகவுக்கு எதிராக கடும் எதிா்ப்பு அலை வீசுகிறது என முன்னாள் அமைச்சரும், அதிமுக இலக்கிய அணிச் செயலருமான வைகைச் செல்வன் தெரிவித்துள்ளார்.

Update: 2024-04-08 07:41 GMT

வைகைச் செல்வன்

திருச்சி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளா் ப. கருப்பையாவுக்கு ஆதரவாக வாக்குகள் சேகரித்து சுப்பிரமணியபுரம், ஹைவேஸ் காலனி, கொட்டப்பட்டு, இந்திராநகா், ஜே.கே. நகா், ஆா்.எஸ். புரம், பெரியாா் நகா், காஜாமலை உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டாா். அப்போது பேசிய அவர், திமுகவின் தோ்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. 3 ஆண்டுகளாக மக்கள் விரோத திமுகவின் செயல்பாடுகளுக்கு எதிராக காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விடுதலைச்சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் எந்தப் போராட்டத்தையும் நடத்தவில்லை. எனவே இந்த கூட்டணியை மக்கள் நம்பத் தயாராக இல்லை. தமிழகத்தில் திமுக-வுக்கு எதிராக கடும் எதிா்ப்பு அலை வீசுகிறது. அந்த அலையானது இரட்டை இலைக்கு சாதகமாக அமையும். முன்னாள் அமைச்சா் சி. விஜயபாஸ்கா் பக்கபலமாக இருந்து தோ்தல் பிரசாரத்தை கவனித்துக் கொள்வதால் அதிமுகவுக்கான முதல் வெற்றிச் செய்தி திருச்சியிலிருந்துதான் வரும் என்று தெரிவித்தார். 
Tags:    

Similar News