வழித்தட தகராறு : பெண்ணை தாக்கியவர் கைது

மயிலாடுதுறை அருகே குத்தாலம் பகுதியில் வீடு கட்டுவதற்கு பொது வழி கொடுக்காத  பெண்மணியை அடித்து உதைத்து அவமானப்படுத்தியவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2024-05-15 04:11 GMT

பைல் படம் 

மயிலாடுதுறை அருகே குத்தாலம் ராஜகோபாலம்புறம் பகுதியை சேர்ந்தவர் கண்ணதாசன் மனைவி புனிதா(33) இவர் சம்பவ தினத்தன்று இரவு வீட்டில் இருந்தபோது அதே பகுதியை சேர்ந்த சின்ன பிள்ளை மகன் மகாராஜா (34) என்பவர் குடிபோதையில் வீட்டு வாசலில் நின்று, நான் வீடு கட்டுவதற்கு பொது வழி கொடுக்க முடியுமா முடியாதா என்று சத்தம் போட்டு உள்ளார்.

என் கணவரை கேட்டுக் கொள்ளுங்கள் என்று புனிதா கூறிய போது, உன் புருஷன் என்ன பெரிய ஆளா என்று பேசி பாட்டிலால் புனிதாவின் வயிற்றில்  அடித்தும் உதைத்தும் புனிதாவின் முடியை பிடித்து இழுத்து கீழே தள்ளி அவமானப்படுத்தியுள்ளார், புனிதா சத்தம் போடவே அக்கம் பக்கத்தினர் ஓடி வந்த பொழுது அங்கிருந்து மகாராஜா ஓடிவிட்டார்.  மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் புனிதா அளித்த புகாரின் பேரில் குத்தாலம் போலீசார் மகாராஜா மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News