பள்ளியில் புதிய மாணவர்களுக்கு வரவேற்பு

கீழப்பாவூர் பள்ளியில் முதல் வகுப்பில் சேர்ந்த புதிய மாணவர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது

Update: 2024-06-12 07:50 GMT

புதிய மாணவர்களுக்கு வரவேற்பு கொடுத்த பள்ளி ஆசிரியர்கள் 

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகில் உள்ள கீழப்பாவூரில் நாடார் இந்து தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது. இப்பள்ளியில் 2024-25ம் கல்வி ஆண்டில் புதிதாக 1ம்வகுப்பில் சேர்ந்துள்ள மாணவ, மாணவிகளுக்கு நேற்று வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

மாணவ, மாணவிகள் அனைவரையும் கீழப்பாவூர் முப்புடாதி அம்மன் கோவிலுக்கு அழைத்துச் சென்று, பூஜைகள் நடத்தி அம்மனை வழிபட்ட செய்தனர். தொடர்ந்து அங்குள்ள பெருந்தலைவர் காமராஜரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தனர். பின்னர் புதிதாக சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு மாலைகள் மற்றும் கிரீடம் அணிவித்து ஊர்வலமாக பள்ளிக்கு அழைத்து வந்தனர். பள்ளி நுழைவு வாயிலில் ஆசிரியர்கள் இனிப்பு வழங்கியும், மலர் தூவி, ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

தொடர்ந்து மை பஸ்ட் டே ஆப் ஸ்கூல் என்று எழுதப்பட்ட செல்பி பூத்தில் மாணவர்கள் நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

Tags:    

Similar News