கிறித்துவ தேவாலயங்களில் பணிபரிவோருக்கான நலவாரியம்

கிறித்துவ தேவாலயங்களில் பணிபரிவோருக்கான நலவாரியம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது

Update: 2024-06-21 17:01 GMT

நலவாரியம் அமைப்பு 

தமிழ்நாட்டில் உள்ள கிறித்துவ தேவாலயங்களில் பணியாற்றும் உபதேசியார்கள், வேதியர்கள், சீஷப்பிள்ளைகள், பாடகர்கள், கல்லறை பணியாளர்கள், கிறித்துவ அனாதை இல்லங்கள், தொழுநோயாளியர் மறுவாழ்வு இல்லங்களின் பணியாளர்கள் போன்றோர்களின் சமூக, பொருளாதார மற்றும் கல்வி மேம்பாட்டிற்காக கிறித்துவ தேவாயங்களில் பணிபரியும் உபதேசியார்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியம் அமைக்க அரசு ஆணையிட்டுள்ளது.

இந்நல வாரியத்தில் உறுப்பினராக சேருவதற்கான விண்ணப்பப் படிவங்களை மதுரை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் மூலம் பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களுடன் இந்நல வாரிய உறுப்பினராக பதிவு பெற தகுதியுடையுபர் என்பதற்கு ஆதாரமாக பணிபுரியும் கிறித்துவ தேவாலயத்தின் நிர்வாகி அல்லது சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலரிடமிருந்து சான்றிதழ் பெற்று சமர்ப்பிக்க வேண்டும்.

தகுதி வாய்ந்த விண்ணப்பங்களுக்கு மதுரை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரால் உறுப்பினர் அடையாள அட்டை வழங்கப்படும். மேலும், இவ்வாரியத்தில் பதிவு செய்யும் உறுப்பினர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வரும் ஏனைய அமைப்பு சாரா வாரியங்கள் மூலம் வழங்கப்பட்டு வரும் நலத்திட்டங்கள் போன்றே வழங்கப்படும்.

அதன் விபரம் பின்வருமாறு, 1. கல்வி உதவித்தொகை 10-ஆம் வகுப்பு முதல் ஐ.டி.ஐ பாலிடெக்னிக் படிப்பு, தொழிற்கல்வி பட்டப்படிப்பு வரை. 2. விபத்தினால் மரணம் ஏற்பட்டால் உதவித்தொகை ரூ.1,00,000/- 3. விபத்தினால் ஊனம் ஏற்பட்டால் ஊனத்தின் தன்மைக்கேற்ப உதவித்தொகை ரூ.10,000/- முதல் ரூ.1,00,000/- வரை. 4. இயற்கை மரணம் உதவித்தொகை ரூ.20,000/- 5. ஈமச்சடங்கு உதவித்தொகை ரூ.5,000/- 6. திருமண உதவித்தொகை ஆண்களுக்கு ரூ.3,000/- மற்றும் பெண்களுக்கு ரூ.5,000/- 7. மகப்பேறு உதவித்தொகை ரூ.6,000/- மற்றும் கருச்சிதைவு/கருக்கலைப்பு உதவித்தொகை ரூ.3,000/- 8. கண்கண்ணாடி உதவித்தொகை ரூ.500/- 9. முதியோர் ஓய்வூதியம் (மாதந்தோறும்) ரூ.1,000/- மேலும், விபரங்களுக்கு மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை நேரில் தொடர்பு கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.மா.சௌ.சங்கீதா, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News