நாகை பகுதியில் 3வது நாளாக பரவலாக மழை  .               

நாகை மாவட்டம் கீழ்வேளூர், திருக்குவளை பகுதியில் 3வது நாளாக பரவலாக மழை  கோடை உழவிற்கு ஏற்ற மழை என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.              

Update: 2024-05-10 10:43 GMT

நாகை மாவட்டம் கீழ்வேளூர், திருக்குவளை பகுதியில் 3வது நாளாக பரவலாக மழை  கோடை உழவிற்கு ஏற்ற மழை என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.             


  நாகை மாவட்டம் கீழ்வேளூர். திருக்குவளை பகுதியில் 5 மாதத்திற்கு பின் கடந்த 3 நாட்களாக  மழை பெய்தது.  நாகை மாவட்டம்  கீழ்வேளூர் மற்றும் திருக்குவளை பகுதியில் கடந்த 3 நாள்களாக காலை நேரத்தில் கரு மேக மூட்டம் ஏற்பட்டது அதைக் தொடர்ந்து  கீழ்வேளூர், திருக்குவளை பகுதியில் ஆங்காங்கே கன மழையும், சில இடங்களில் லே சான மழையும் பெய்தது.. கடந்த ஒரு மாதத்திற்கும் மேல் வெயில் சுட்டெரிந்தும்,கடந்த சில நாாள்களாக அனல் காற்றும் வீசி வந்தது.

இதனால் பொதுமக்கள் கடுமையான பாதிப்பு ஏற்படுத்தியது. வீடுகளுக்குள்ளும் அனல் தாக்கம் அதிகரித்தது. இதனால் வீட்டில் பகல் நேரத்திலும் ஏ.சி.யை பயன்படுத்தியும் ஏராளமானவர்கள் புதிய ஏ.சி.யை வாங்கி வருகின்றனர். இந்நிலையில் கடந்த 3 நாள்களாக வானம்  மே க மூட்டம் காணப்பட்டு வெயில் மறைந்து குளர்சி ஏற்பட்டது. மே லும் கடந்த 3 நாட்களிலும் ஆங்காங்கே பலத்த மழையும், பல இடங்களில்  லேசான மழை தூரல் சிறிது நேரம் மழை பெய்து. 3 நாள் மழையில் கீழ்வேளூர்,  திருக்குவளை பகுதியில் பெரும்பாலான பகுதியில் கோடை உழவுக்கு தேவையான மழை பெய்துள்ளதால் சாகுபடி பணிக்கு ஏற்றதாக அமைந்துளளதால் இந்த ஆண்டு சாகுபடி பணியை தொடங்கலாம் என்பதால் விவசாயிகள் மழ்ச்சியடைந்துள்ளனர்.

Tags:    

Similar News