கணவரை பிரிந்த இளம்பெண் தற்கொலை

திருச்செந்தூா் அருகே கணவரை பிரிந்து வசித்து வந்த இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2024-05-13 05:56 GMT

தற்கொலை 

ஈரோடு மாவட்டம், குமாரபாளையத்தை சோ்ந்தவா் மோகனசுந்தரம். இவரது மனைவி ஷாலினி (28). தம்பதிக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். தம்பதியிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, ஷாலினி தனது கணவரையும் குழந்தைகளையும் பிரிந்து காயல்பட்டினத்தில் தனியாக வசித்து வந்தாா். பின்னர் திருச்செந்தூா் அருகே சண்முகபுரம் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கிய அவா், அப்பகுதியில் உள்ள ஹோட்டலில் வேலை செய்து வந்துள்ளாா்.

இந்நிலையில் கடந்த 9ஆம் தேதி வீட்டு படுக்கை அறையில் உள்ள மின்விசிறியில் சேலையால் தூக்கிட்டு தற்தொலை செய்துகொண்டாா்.திருச்செந்தூா் தாலுகா போலீசார், ஷாலினியின் உடலை கைப்பற்றி திருச்செந்தூா் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

ஷாலினிக்கு அடிக்கடி நெஞ்சு வலி ஏற்பட்டதாகவும், கவனிக்க யாரும் இல்லாத விரக்தியில் தூக்கிட்டு உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது. ஷாலினியின் தாயாா் தேவிகா கொடுத்த புகாரின் பேரில் திருச்செந்தூா் தாலுகா போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News