போலீசில் புகார் அளித்த மனைவி - தாக்கிய கணவர் மீது வழக்கு

கொட்டாரத்தில் குடும்ப பிரச்சினை குறித்து போலீசில் புகார் அளித்த மனைவியை தாக்கிய கணவன் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2024-04-25 05:44 GMT
பைல் படம்

கன்னியாகுமரி அருகே உள்ள கொட்டாரம் நாராயணன் புதூர் பகுதியை சேர்ந்தவர் மதன் (32). இவரது மனைவி விஜயகுமாரி (28).  குடும்ப தகராறு காரணமாக இவர்கள் பிரிந்து உள்ளனர். விஜயகுமாரி தற்போது தனது பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார். இந்த பிரச்சனை தொடர்பாக கன்னியாகுமரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் விஜயகுமாரி புகார் அளித்துள்ளார்.      

 இந்த நிலையில் சம்பவ தினம் மதன் மற்றும் அவரது சகோதரர் செல்வன் ஆகியோர்  விஜயகுமாரின் பெற்றோர் வீட்டுக்கு சென்று அவர்களிடம் தகராறு செய்தனர். என் மீது எப்படி புகார் அளிக்கலாம் என்று கேட்டு விஜயகுமாரியை மதன் தாக்கியதாக கூறப்படுகிறது.   இதை தடுக்க வந்த விஜயகுமாரியின் சகோதரர் அஜித்குமார் (26) பாட்டி  அயனேசி (69) ஆகியவரையும் தாக்கி உள்ளனர். இதில்  மூன்று பேரும் காயம் அடைந்தனர். அஜித்குமாருக்கு தலையில் கல்லால் தாக்கியதில் பலத்த காயம் ஏற்பட்டு கன்னியாகுமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்த புகாரின் பேரில் மதன் மற்றும் செல்வம் மீது கன்னியாகுமரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News