அவுட்டுக்காய் பயன்படுத்தி காட்டுபன்றி வேட்டை - 5 பேர் கைது

பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகத்தில் அவுட்டுக்காய் எனும் வெடிகுண்டை பயன்படுத்தி காட்டு பன்றியை வேட்டையாடிய 5 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.

Update: 2024-02-01 08:45 GMT

கைது செய்யப்பட்டவர்கள் 

கோவை: பெரியநாயக்கன்பாளையம் வனச்சரக ஆளுமைக்கு உட்பட்ட வனப்பகுதிகள் மற்றும் வனத்தை ஒட்டியுள்ள கிராமங்களில் வனவிலங்குகளை வேட்டையாட அவுட்டுக்காய் எனும் நாட்டு வெடி குண்டு பயன்படுத்துவது தொடர்பாக கடந்த சில தினங்களாக தேடுதல் வேட்டை மற்றும் தீவிர புலன் விசாரணை மேற்கொண்டு வரப்பட்டது.இந்நிலையில் இன்று பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகம் தோலம்பாளையம் சுற்றுக்கு உட்பட்ட நீலாம்பதி பகுதியை சேர்ந்த கிருஷ்ணசாமி, மருதன்,ரங்கசாமி,அப்பய்யன்,வெள்ளிங்கிரி ஆகியோர் அவுட்டுக்காய் பயன்படுத்தி காட்டுப்பன்றியை வேட்டையாடிய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டனர்.
Tags:    

Similar News