மலைப்பாதையில் காட்டு யானை முகாம்; போக்குவரத்து பாதிப்பு

கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் மலைப்பாதையில் காட்டு யானை முகாமிட்டுள்ளதால் போக்குவரத்தில் இடையூறு ஏற்பட்டுள்ளது.

Update: 2023-12-19 07:04 GMT

  கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் மலைப்பாதையில் காட்டு யானை முகாமிட்டுள்ளதால் போக்குவரத்தில் இடையூறு ஏற்பட்டுள்ளது.  

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லக்கூடிய மலைப் பாதையில் அவ்வப்போது காட்டு யானைகள் உலா வருவது தொடர்ந்து வருகிறது. கடந்த சில நாட்களாக யானைகளின் நடமாட்டம் இல்லாத நிலையில் இன்று அதிகாலை மலைப்பாதையில் ஒற்றைக் காட்டு யானை முகாமிட்டது. சாலையோரம் இருந்த மூங்கில்களை சாப்பிட்டு கொண்டிருந்த யானையால் வாகன ஓட்டிகள் செல்ல முடியாமல் அச்சமடைந்தனர். காட்டு யானை முகாமிட்டதால் சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. மலைப்பாதையில் காட்டு யானைகள் உலா வருவதை வனத்துறையினர் கண்காணித்து போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News