மாமரங்களை முறித்து காட்டு யானைகள் அட்டகாசம்!

பேரணாம்பட்டு பகுதியில் விளைநிலங்களுக்குள் காட்டு யானைகள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன.

Update: 2024-04-03 07:22 GMT

காட்டு யானைகள்

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு பகுதியில் விளைநிலங்களுக்குள் காட்டு யானைகள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன. இந்த நிலையில் குண்டலப்பல்லி வனப்பகுதியை ஒட்டி சிந்த கணவாய் கிராமத்தில் அமைந்துள்ள கமலாபுரம் கிராமத்தைச் சேர்ந்த நித்தியானந்தன் என்பவருக்கு சொந்தமான மாந்தோப்புக்குள் 7 காட்டு யானைகள் புகுந்தன. அவை 10-க்கும் மேற்பட்ட மாமரங்களின் கிளைகளை முறித்து சேதப்படுத்தியும், மாந்தோப்பை சுற்றிலும் நடப்பட்டிருந்த கற்றாழைகளை பிடுங்கி எறிந்தும் அட்டகாசத்தில் ஈடுபட்டன.இதனையறிந்த அந்த பகுதி விவசாயிகள் அங்கு சென்று பட்டாசுகளை வெடித்து காட்டுக்குள் யானைகளை விரட்டினர்.இதுகுறித்து டி.டி.மோட்டூர் கிராம நிர்வாக அலுவலர் நியோ ரொட்டக்ஸ் நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.
Tags:    

Similar News