ஒன்றன்பின் ஒன்றாக... குட்டிகளுடன் சாலையை கடந்த காட்டு யானைகளால் பரபரப்பு !

பந்தலூர் தேவாலா பகுதிகளில் அடிக்கடி ஒன்றன்பின் ஒன்றாக குட்டிகளுடன் சாலையை கடந்த காட்டு யானைகளால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Update: 2023-12-07 11:09 GMT

பந்தலூர் தேவாலா பகுதிகளில் அடிக்கடி ஒன்றன்பின் ஒன்றாக குட்டிகளுடன் சாலையை கடந்த காட்டு யானைகளால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் அதை சுற்றியுள்ள பெரும்பாலான கிராம பகுதிகளில் கடந்த சில நாட்களாக காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகமாக காணப்பட்டு வருகிறது. குறிப்பாக பந்தலூர் தேவாலா பகுதிகளில் அடிக்கடி காட்டு யானைகள் பிரதான சாலைகளில் உலா வருகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் மட்டுமின்றி குடியிருப்பு வாசிகளும் அச்சமடைந்துள்ளனர். இந்த நிலையில் தேவாலாவிலிருந்து பந்தலூர் செல்லக்கூடிய தேவகிரி பகுதியில் மூன்று குட்டிகளுடன் மூன்று பெரிய யானைகள் அடுத்தடுத்து வனப்பகுதியில் இருந்து வெளியேறி சாலை கடந்து சென்றன. இதனை கண்ட வாகன ஓட்டிகள் சாலையிலேயே வாகங்களை சிறிது நேரம் நிறுத்தினர். யானைகள் வனப்பகுதிக்குள் சென்றவுடன் வாகனங்கள் இயல்பாக சென்றன.
Tags:    

Similar News