ஆம்பூர் அருகே பயிர்களை சேதப்படுத்திய காட்டு யானைகள்

ஆம்பூர் பகுதியில் விவசாய நிலத்தில் புகுந்த காட்டு யானைகள் பயிர்களை சேதப்படுத்தின.

Update: 2023-12-02 09:33 GMT

ஆம்பூர் அருகே விவசாய நிலத்தில் புகுந்த காட்டு யானைகள் பயிர்களை சேதப்படுத்தின.

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்திய காட்டு யானைகள்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த அருங்கள்துருகம் சுட்டகுண்டா கிராமத்தில் உள்ள விவசாய நிலங்களில் புகுந்த காட்டு யானைகள்,   அங்கு ராஜேந்திரன் என்பவரது நிலத்தில் பயிரிடப்பட்டு அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்களையும், ரவிச்சந்திரன் என்பவருக்கு சொந்தமான நிலத்தில் பயிரிடப்பட்டு இருந்த வாழை மரங்கள் மற்றும் தென்னை மரங்களை சேதப்படுத்தி உள்ளது.

சத்தம் கேட்டு ஓடிவந்த விவசாயிகள் பட்டாசுகளை வெடித்து யானைகளை விரட்டினர்., பின்னர் வனத்துறை அதிகாரிகள் இப்பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் விவசாய நிலங்களை பாதுகாக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Tags:    

Similar News