கரூர் அருகே சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்ட பெண் கைது

கரூர் அருகே சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்ட பெண் கைது செய்யப்பட்டார்.

Update: 2024-04-02 15:50 GMT

காவல் நிலையம் 

கரூர் மாவட்டம், மாயனூர் காவல் எல்லைக்குட்பட்ட, பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை நடப்பதாக காவல் உதவி ஆய்வாளர் திலக்-குக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில், ஏப்ரல் ஒன்றாம் தேதி காலை 11 மணியளவில், வீரராக்கியம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது, அப்பகுதியைச் சேர்ந்த தர்மலிங்கம் மனைவி தங்கம்மாள் வயது 57 என்பவர், அவரது வீட்டின் அருகாமையில் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் அவர் விற்பனைக்கு வைத்திருந்த 13 குவாட்டர் பாட்டில்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

பின்னர் சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்ட தங்கம்மாள் மீது வழக்கு பதிவு செய்து உள்ளனர் மாயனூர் காவல்துறையினர்.

Tags:    

Similar News