குடும்ப தகராறில் கிணற்றில் குதித்து பெண் தற்கொலை

குடும்ப தகராறில் கிணற்றில் குதித்து பெண் தற்கொலை

Update: 2024-06-20 05:51 GMT

காவல்துறை விசாரணை


police station

அரும்பாவூரை சேர்ந்தவர் அங்கமுத்து. இவ்ரது மனைவி பாஞ்சாலி (32). இவர்கள் இருவரும் விவசாயம் செய்து வந்தனர். இந்தநிலையில் அங்கமுத்து அவ்வப்போது மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்ததாக தெரிகிறது. இதனால் கணவன்- மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனம் டைந்த பாஞ்சாலி அருகே உள்ள விவசாய கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த அரும்பாவூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாஞ்சாலியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News