அம்பை அருகே இளைப்பு நோயால் பெண் பலி
அம்பை அருகே இளைப்பு நோயால் பாதிக்கப்பட்ட பெண் பரிதாபமாக உயிரிழந்தார். போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.;
By : King 24x7 Angel
Update: 2024-02-07 07:02 GMT
அம்பை அருகே இளைப்பு நோயால் பெண் பலி போலீசார் விசாரணை
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள காக்கநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் புலமாடன். இவரது மனைவி சசிகலா. சசிகலா நீண்ட நாட்களாக இளைப்பு நோயால் அவதிப்பட்டு வருகின்றார்.இந்த நிலையில் நேற்று இரவு இந்த இளைப்பு சசிகலாவிற்கு அதிகமாகி சிகிச்சைக்காக அம்பை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அம்பாசமுத்திரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.