கணவன், மனைவி தகராறு பெண் தூக்கிட்டு தற்கொலை

பூதப்பாண்டியில் கணவன், மனைவி தகராறு பெண் தூக்கிட்டு தற்கொலை

Update: 2024-02-19 15:43 GMT

தூக்கிட்டு தற்கொலை

குமரி மாவட்டம் பூதப்பாண்டியை அடுத்துள்ள திட்டு விளை பகுதியில் வசித்து வருபவர் டிரைவர் கங்குலி கண்ணன். இவருக்கும் யோகேஸ்வரி (23) என்பவருக்கும் சுமார் 3 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.இவர்களுக்கு சபீனா என்ற இரண்டு வயது பெண் குழந்தையும், அபிஷா என்ற பத்து மாத கைக்குழந்தையும் உள்ளது. இன்று காலை கணவன், மனைவி மற்றும் மாமியார் ஆகிய மூவரும் சீதப் பாலிலுள்ள ஒரு திருமண வீட்டிற்கு சென்று வந்துள்ளதாகவும், பின்னர் யோகேஸ்வரி தான் வசிக்கும் வீட்டிற்க்கு சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. அவரது கணவர் சிறிது நேரம் கழித்து வீட்டிற்க்கு சென்று பார்க்கும் போது கதவு உள்பக்கமாக தாழிடப்பட்டு காணப்பட்டது . கணவர் கங்குலி கண்ணன் பல முறை கதவை தட்டியும் கதவு திறக்காததால் கதவை உடைத்து உள்ளே சென்று பார்க்கும் போது யோகேஸ்வரி வீட்டு சமையலறையில் துப்பட்டாவால் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளார். உடனே பூதப்பாண்டிஅரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளார். அவரை பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டார் என தெரிவித்தார் இது குறித்து பூதப்பாண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
Tags:    

Similar News