மேட்டூரில் மின்சாரம் தாக்கி பெண் பலி

மேட்டூர் அருகே கொளத்தூரில் மின்சாரம் தாக்கி பெண் உயிரிழந்தார்.

Update: 2024-05-09 14:56 GMT

உயிரிழந்த பெண்

மேட்டூர் அருகே கொளத்தூர் கத்திரிப்பட்டியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (35) இவரது மனைவி பவித்ரா(28). இந்த  தம்பதியினருக்கு இரண்டு பெண் குழந்தை உண்டு. இன்று காலை வீட்டின் முன்பு மின்கம்பத்தில் இருந்த ஸ்டே கம்பியை பவித்ரா கையால் தொட்டுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி பவித்ரா  மயங்கி விழுந்தார்.

அருகில் இருந்தவர்கள் உடனடியாக பவித்ராவை நீட்டு மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் பவித்ரா ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக கொளத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News