தலைவாசல் அருகே பேருந்து மோதி பெண் பலி

தலைவாசல் அருகே சேலம் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பேருந்து பெண் மீது மோதியதில், சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

Update: 2024-06-19 15:48 GMT
பைல் படம்


கெங்கவல்லி:சேலம் மாவட்டம் கெங்கவல்லி வட்டம் ஆத்தூர் அடுத்த அரசநத்தம் கிழக்கு காடுபகுதியை சேர்ந்தவர் பவுனாம்பாள் (55). இவர், நேற்று தனது பேத்திக்கு மாப்பிள்ளை பார்ப்பதற்காக, சிறுவாச்சூர் கிராமத்துக்கு சென்றுள்ளார். வீடு திரும்பும் போது தலைவாசல் அருகே சேலம் சென்னை தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது அவ்வழியாக வந்த பேருந்து ஒன்று அவர் மீது மோதியதில், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
Tags:    

Similar News