சாராயம் விற்ற பெண் கைது

கொந்தளம் அருகே உள்ள எஸ்.கே. மேட்டூரில் வீட்டில் சாராயம் காய்ச்சிய பெண்னை போலீசார் கைது செய்து, 3 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

Update: 2024-06-21 15:10 GMT

பைல் படம் 

பரமத்தி வேலூர் தாலுகா, கொந்தளம் அருகே பெண் ஒருவர் வீட்டிலேயே சட்ட விரோதமாக சாராயம் காய்ச்சுவதாக வேலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரங்கசாமிக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் ரங்கசாமி தலைமையிலான போலீசார் கொந்தளம் அருகே உள்ள எஸ்.கே . மேட்டூரில் உள்ள சின்னத்துரை(லேட்) என்பவரது மனைவி சுதா(45) வீட்டிற்கு சென்று சோதனை மேற்கொண்டனர். இதில் சுதா வீட்டில் உள்ள அடுப்பில் வைத்து சாராயம் காய்ச்சியது தெரிய வந்தது. அதனையடுத்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த மூன்று லிட்டர் சாராயத்தை வேலூர் போலீசார் போலீசார் பறிமுதல் செய்து சட்ட விரோதமாக சாராயம் காய்ச்சிய சுதாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News