ஜேசிஐ இராசிபுரம் மெட்ரோவின் சார்பாக மகளிர் தினம் கொண்டாட்டம்

ஜேசிஐ இராசிபுரம் மெட்ரோவின் சார்பாக மகளிர் தினம் கொண்டாடப்பட்டது.

Update: 2024-03-16 15:17 GMT
பரிசு வழங்கல் 

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் ஜேசிஐ JCI இராசிபுரம மெட்ரோவின் சார்பாக மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. இவ்விழாவை JCl ராசிபுரம் மெட்ரோவின் தலைவர் ஆர். சதீஷ்குமார், தலைமை வகித்தார். இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினராக JCI மண்டலம் 29 யின் இயக்குனர் JC கருணாமூத்ரன் அவர்கள் கலந்து கொண்டார்.

இவ்விழாவை JCI ராசிபுரம் மெட்ரோவின் மகளிர் பிரிவின் சேர்மேன் திருமதி உமா மற்றும் திருமதி வசந்தி ஆகியோர் தொகுத்து வழங்கினர்.

இந்நிகழ்வில் ஜேசிஐ ராசிபுரம் மெட்ரோவின் செயலாளர் நிஜாமுதீன், பொருளாளர் சரஸ்வதி, முன்னாள் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். மேலும் இந்த நிகழ்வில் பெண் தொழில் முனைவோர்களை சால்வை அணிவித்து நினைவு பரிசு வழங்கி கௌரவித்தனர்.

Tags:    

Similar News