வியாபாரி தற்கொலை-போலீசார் விசாரணை

வங்கி கடனை திரும்ப செலுத்த முடியாததால் நகைப்பட்டறை ஊழியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2024-01-28 07:18 GMT

தற்கொலை

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் ராமன்(25).கடந்த மூன்று ஆண்டுகளாக கோவை வைசியாள் வீதியில் தங்கியிருந்து நண்பர்களுடன் நகை பட்டறை தொழில் செய்து வந்தார்.இந்த நிலையில் பங்குதாரர் ஒருவர் வங்கியில் வாங்கிய கடனை திருப்பி செலுத்தாததால் அனைவரும் தொழிலில் இருந்து பிரிந்து செல்வது என முடிவு செய்தனர். இதனால் மனமுடைந்த நிலையில் காணப்பட்ட ராமன் வீட்டிலிருந்து ஆசிட்டை குடித்து தற்கொலை செய்து கொண்டார்.இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த பெரியகடை வீதி போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Tags:    

Similar News