அடையாளம் தெரியாத வாகனம் மோதி தொழிலாளி சாவு
சாலையை கடக்க முயன்ற தொழிலாளி மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்து ஏற்பட்டது.;
By : King 24x7 Angel
Update: 2024-06-19 06:14 GMT
தொழிலாளி சாவு
வேலூர் இடையன்சாத்து ராமலிங்கம் நகரை சேர்ந்தவர் தொழிலாளி நாகராஜ் (வயது 54). இவரது வீடு வேலூர்- ஆரணி சாலையை ஒட்டியபடி உள்ளது. இந்நிலையில், நாகராஜ் சாலையை கடக்க முயன்றார்.அப்போது அந்த வழியாக வேகமாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த நாகராஜை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.இதுகுறித்து பாகாயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.