உலக முதியோர் கொடுமை ஒழிப்பு விழிப்புணர்வு தினம்

தென்காசியில் உலக முதியோர் கொடுமை ஒழிப்பு விழிப்புணர்வு தினம் அனுசரிக்கப்பட்டது.

Update: 2024-06-16 02:20 GMT

தென்காசியில் உலக முதியோர் கொடுமை ஒழிப்பு விழிப்புணர்வு தினம் அனுசரிக்கப்பட்டது.


உலக முதியோர் கொடுமை ஒழிப்பு விழிப்புணர்வு தினம் தென்காசி ஐ சி ஐ அரசு மேல்நிலைப் பள்ளியில் அனுசரிக்கப்பட்டது. தென்காசி மூத்தோர் மன்ற தலைவர் அழகாராஜா, செயலாளர் இராமலிங்கம், பொருளாளர் கணேசமூர்த்தி, பொறியாளர் குத்தாலிங்கம், திரு சந்திரன், காந்திமாதி நாதன் ஆகியோர் மூத்தோர் மன்றத்தின் சார்பில் கலந்துகொண்டனர். பள்ளித் தலைமை ஆசிரியர் இராமசாமி தலைமை ஏற்றார். உதவித் தலைமை ஆசிரியர் மாரிமுத்துசாமி நிகழ்வை ஒருங்கிணைத்தார். முத்தோர் மன்ற தலைவர் அழகராஜா விழிப்புணர்வு உரை நிகழ்த்தினார். கணேச மூர்த்தி உறுதிமொழியை வாசித்து ஏற்கச் செய்தார். ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டு உறுதிமொழி ஏற்றனர்.
Tags:    

Similar News