உலக தொழுநோய் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

மகாத்மா காந்தி நினைவு தினத்தையொட்டி செஞ்சியில் நடந்த உலக தொழு நோய் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ஸ்ரீரங்க பூபதி நர்சிங் கல்லூரி மாணவ- மாணவிகள் கலந்து கொண்டு தொழுநோய் ஒழிப்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

Update: 2024-02-01 05:54 GMT

உறுதிமொழி ஏற்பு 

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த ஆலம்பூண்டியில் உள்ள ஸ்ரீரங்க பூபதி நர்சிங் கல்லூரி மற்றும் சத்தியமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையம் சார் பில் மகாத்மா காந்தி நினைவு தினத்தையொட்டி உலக தொழு நோய் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி சத்தியமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்றது. இதற்கு டாக்டர் ஜி.என்.பவித்ரா தலைமை தாங்கினார். இதில் சிறப்பு அழைப்பாளராக ஸ்ரீரங்க பூபதி கல்வி நிறுவன செயலாளர் ஸ்ரீபதி கலந்து கொண்டு பேசினார். இதில் ஸ்ரீரங்க பூபதி நர்சிங் கல்லூரி மாணவ- மாணவிகள் கலந்து கொண்டு தொழுநோய் ஒழிப்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். நிகழ்ச்சியில் ஒருங்கிணைப்பாளர் பிரியங்கா, பேராசிரியர் லாவன்யா, மேற்பார்வையாளர் தங்கராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News