செஞ்சி அருகே இளம்பெண் மாயம்
செஞ்சி அருகே லேப்டாபை சரிபார்த்து வருவதாக கூறிய இளம்பெண் வீடு திரும்பாத நிலையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.
Update: 2023-12-25 14:10 GMT
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 23 வயதுடைய இளம்பெண். எம்.எஸ்சி. பட்டதாரியான இவர் சம்பவத்தன்று மடிக்கணினியை சரிசெய்து வருவதாக பெற்றோரிடம் கூறிவிட்டு, வீட்டை விட்டு வெளியே சென்றார். பின்னர், மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் பல்வேறு இடங்களில் அவரை தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்த புகாரின் பேரில் செஞ்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து, மாயமான இளம் பெண்ணை தேடி வருகின்றனர்.