இளம்பெண் மாயம் - போலீசார் விசாரணை!

சேத்துப்பட்டு அருகே இளம்பெண் மாயமானார் .

Update: 2024-05-29 07:37 GMT

இளம்பெண்

திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர் பகுதியை சேர்ந்த 24 வயது இளம் பெண் செய்யாறில் தையல் பயிற்சிக்கு சென்றார். அதன் பிறகு மீண்டும் வீடு திரும்பாததால் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். மகளை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால் பெரணமல்லூர் காவல் நிலையத்தில் பெற்றோர் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News