நேருக்கு நேர் மோதி விபத்து

80 அடி சாலை எதிரே டூவீலர்கள் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது.

Update: 2024-06-19 15:36 GMT

கோப்பு படம்

 கரூர்,வெங்கமேடு, விவிஜி நகர், கலைஞர் சாலை பகுதியை சேர்ந்தவர் ராமசாமி மகன் ஜெகதீஷ் (22). இவர் ஜூன் 17ஆம் தேதி காலை 10:30 மணி அளவில், கரூர், 80 அடி சாலையில் எதிரே உள்ள அருண் டீ ஸ்டால் அருகே தனது டூவீலரில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது, அதே சாலையில் எதிர் திசையில், சேலம் மாவட்டம், அனையள் பட்டி, மணியரன்காடு பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணன் மகன் ராஜூ ( 42) என்பவர்,வேகமாக ஓட்டி வந்த டூவீலர், ஜெகதீஷ் மீது நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது.

இதில், ஜெகதீசுக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டதால், உடனடியாக அவரை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம், கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக ஜெகதீஷ் அளித்த புகார் பேரில், சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், இது தொடர்பாக டூவீலரை கவனக்குறைவாக ஓட்டி, விபத்து ஏற்படுத்திய ராஜி மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Tags:    

Similar News