இளம் வாக்காளர்கள் ஏறத்தாழ 23,500 நபர்கள் உள்ளனர்

நாமக்கல் மாவட்டத்தில் முதல் முறையாக வாக்களிக்க உள்ள இளம் வாக்காளர்கள் ஏறத்தாழ 23,500 நபர்கள் உள்ளதாக, தேர்தல் அலுவலர் உமா தெரிவித்துள்ளார்.

Update: 2024-04-01 11:10 GMT

நாமக்கல் மாவட்டத்தில் முதல் முறை வாக்களிக்க உள்ள இளம் வாக்காளர்கள் ஏறத்தாழ 23,500 நபர்கள் உள்ளனர். மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, தகவல். நாமக்கல் மாவட்டம், பாச்சல், பாவை பொறியியல் கல்லூரியில் இன்று (1.4.2024) மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, தலைமையில் மக்களவைத் தேர்தல் - 2024 முன்னிட்டு தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் இந்திய தேர்தல் ஆணையத்தின் மூலம் மக்களவை பொதுத்தேர்தல் 2024 மார்ச் 16 அன்று அறிவிப்பு வெளியிடப்பட்டது. அன்று முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. தேர்தல் நாளான ஏப்ரல் 19 (வெள்ளிக்கிழமை) அன்று நாமக்கல் மாவட்டத்தில் உள்ள வாக்களிக்க தகுதியுடைய அனைவரும் 100 சதவிகிதம் வாக்களிப்பதை உறுதி செய்யும் வகையில் நாள்தோறும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. நாமக்கல் மக்களவை தொகுதியில் 40 வேட்பாளர்கள் போட்டியிட உள்ளார்கள். அவர்களுக்கான சின்னம் ஒதுக்கீடு செய்யும் பணிகள் முடிவுற்றுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் கடந்த தேர்தல்களில் 80 சதவிகிதம் வரை வாக்கு பதிவாகி உள்ளது. நாமக்கல் மாவட்டம் கல்வி அறிவில் மிகச்சிறப்பாக விளங்கும் மாவட்டம். எனவே, இந்தியாவிலேயே அதிக வாக்கு பதிவு பெற்ற மாவட்டமாக நாமக்கல் மாவட்டம் விளங்கிடும் வகையில் அனைவரும் வாக்களிக்க வேண்டும்.

முன்னதாக, மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, தலைமையில் மக்களவைத் தேர்தல் - 2024 முன்னிட்டு வாக்காளர் விழிப்புணர்வு உறுதிமொழியை கல்லூரி மாணவ, மாணவியர்கள் உட்பட அனைவரும் ஏற்றுக்கொண்டனர். மேலும், கல்லூரியில் மாதிரி வாக்குச்சாவடி அமைக்கப்பட்டு முதல்முறை வாக்களிக்க உள்ள மாணவ, மாணவியர்களுக்கு வாக்கு பதிவு குறித்து செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.

தொடர்ந்து, தேர்தல் நாள் 19.4.2024 அன்று முதல் தலைமுறை வாக்காளர்கள் வாக்களிப்பதின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கைகளில் எனது வாக்கு விற்பனைக்கு அல்ல என்று மெகந்தியிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். மேலும், மாணவ, மாணவியர்களுக்கு தேர்தல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு குறும்படம் திரையிடப்பட்டது.

Tags:    

Similar News