இளம்பெண் தற்கொலை

சேலம் அருகே கள்ளகாதலால் ஏற்பட்ட தகராற்றில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2024-03-24 06:48 GMT

தற்கொலை

சேலம் சூரமங்கலம் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் தனலட்சுமி (வயது 32). இவருக்கு கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. 5 வயதில் மகன் உள்ளார். இந்த நிலையில் தனலட்சுமிக்கும் கொல்லப்பட்டியை சேர்ந்த ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் நாளடைவில் அவர்களுக்குள் கள்ளக்காதலாக மாறியது. இதை அறிந்த கணவர், மனைவியை கண்டித்துள்ளார். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து தனலட்சுமி கணவரை பிரிந்து கள்ளக்காதலனுடன் சென்று வசித்து வந்தார். அவருடனும் தனலட்சுமி தகராறு செய்து வந்ததாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த அவர் நேற்று முன்தினம் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து சூரமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து போலீசார் விரைந்து சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News