குடும்ப தகராறு – திருமணமான எட்டே மாதத்தில் தற்கொலை செய்த இளம்பெண்

கன்னியாகுமரி மாவட்டம் ,கட்டிமாங்கோடு பகுதியில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Update: 2024-04-20 10:33 GMT
தற்கொலை

கன்னியாகுமரி மாவட்டம் ,கட்டிமாங்கோடு, வர்த்தக நாடார் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் அம்புரோஸ் மகள் அனிஷா (25). இவர் அதே பகுதியை சேர்ந்த ராஜன் என்பவரை காதலித்து வந்தார். இந்த காதலுக்கு அனிஷா மற்றும் ராஜன் வீட்டில் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து இருவரும் வீட்டை விட்டு வெளியேறி கடந்த எட்டு மாதங்களும் முன்பு திருமணம் செய்து கொண்டனர். தற்பொழுது நாகர்கோவில் பெருவிளை முருகன் கோவில் தெருவில் வசித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் கணவன் மனைவி இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் இரவு வீட்டில் இருந்த அனிஷா படுக்கை அறையில் உள்ள மின்விசிறியில் தூக்கில் தொடங்கினார். இது தொடர்பாக ராஜன் ஆசாரிப்பள்ளம் போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.

சம்பவ இடத்திற்கு சென்று போலீசார் அனிஷா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம். அரசு மருத்து கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து அனுஷாவின் தாய் எமிலி என்பவர் ஆசாரிபள்ளம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். திருமணம் ஆகி 8 மாதமே ஆன நிலையில் நாகர்கோவில் ஆர்டிஓ விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News