ராஜபாளையம் அருகே மின்சாரம் தாக்கி இளம் பெண் உயிரிழப்பு

ராஜபாளையம் அருகே மின்சாரம் தாக்கி இளம் பெண் உயிரிழந்தார்.

Update: 2024-06-15 11:43 GMT
ராஜபாளையம் அருகே மின்சாரம் தாக்கி இளம் பெண் உயிரிழந்தார்

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சொக்கநாதன்புத்தூர் கிருஷ்ணன் கோவில் தெருவை சேர்ந்த சக்திகுமார் என்பவரின் மகள் செந்திமயில்(வயது 22) இவரது கணவர் ராஜாராம் சவுதியில் வேலை செய்கிறார். இந்நிலையில் நேற்று மாலை செந்திமயில் தனது லேப்டாப்பை சார்ஜில் வைத்துக்கொண்டு பயன்படுத்தியதாக கூறப்படுகிறது.

அப்போது திடீரென மின்சாரம் தாக்கியதில் கை கருகி மயங்கியுள்ளார் சத்தம் கேட்டு அவரது தந்தை அவரை மீட்டு சிவகிரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு நடந்த மருத்துவ பரிசோதனையில் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டது.

தெரிய வந்தது. தகவல் அறிந்த சேத்தூர் போலீசார் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

Tags:    

Similar News