சாராயம் பதுக்கிய வாலிபர் கைது
By : King 24X7 News (B)
Update: 2023-11-05 09:39 GMT
கோப்பு படம்
திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஏழுமலை மற்றும் போலீசார் கண்ணமங்கலம் அருகே இரும்பிலி செல்லியம்மன் கோவில் அருகே ரோந்து சென்றனர்.அப்போது அங்கு லாரி டியூப்பில் சாராயம் பதுக்கிய வேலூர் மருதவலிமேடு பகுதியை சேர்ந்த கோபி (வயது 23) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 12 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்து அழித்தனர்