திருமணம் செய்வதாக ஏமாற்றி பெண்ணுக்கு பாலியல் தொல்லை - இளைஞர் கைது

கோவில்பட்டியில் திருமணம் செய்வதாகக் கூறி ஏமாற்றி பெண்ணை பாலியல் தொந்தரவு செய்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

Update: 2023-11-08 05:21 GMT

கைது 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

கோவில்பட்டியையடுத்த முடுக்குமீண்டான்பட்டியைச் சோ்ந்த முத்துராமலிங்கம் என்பவரின் மகன் அருண்பிரகாஷ். இவா் 2017ஆம் ஆண்டு 17 வயது சிறுமியை திருமணம் செய்வதாகக் கூறி பாலியல் தொந்தரவு செய்துள்ளார். பின்னா் அவா் வெளிநாட்டுக்குச் சென்றுவிட்டார். 2021, மாா்ச் மாதம் துபாயிலிருந்து வந்த அவா் மீண்டும் அதே சிறுமியிடம் திருமணம் செய்வதாகக் கூறி பாலியல் தொந்தரவில் ஈடுபட்டுள்ளார். இதையடுத்து அச்சிறுமி 19 வயதில் அருண்பிரகாஷிடம் திருமணம் செய்ய வலியுறுத்தியுள்ளாா். ஆனால் அருண்பிரகாஷ் மறுத்ததையடுத்து சிறுமி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதுகுறித்து அனைத்து மகளிா் போலீஸாா் வழக்குப் பதிந்து அருண்பிரகாஷை தேடி வந்தனா். இந்நிலையில் வெளிநாட்டில் இருந்து ஊருக்கு வந்த அருண்பிரகாஷை அனைத்து மகளிா் போலீஸாா் கைது செய்தனா்.

Tags:    

Similar News