அரிவாளுடன் புகைப்படம் பகிா்ந்த இளைஞா் கைது

சோஷியல்மீடியாவில் அரிவாளுடன் புகைப்படம் பகிா்ந்த இளைஞா் கைது

Update: 2023-11-28 12:01 GMT

சோஷியல்மீடியாவில் அரிவாளுடன் புகைப்படம் பகிா்ந்த இளைஞா் கைது

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே விஸ்வநாதபுரத்தைச் சோ்ந்தவா் உதயகுமாா் (23). இவா், சோஷியல்மீடியாவில் (இன்ஸ்டாகிராம்) பொதுஅமைதியை சீா்குலைக்கும் வகையில் தொடா்ச்சியாக அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் வீடியோக்களை பதிவு செய்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதையறிந்த, செங்கோட்டை காவல் உதவி ஆய்வாளா் இளவரசி, அவரை கைது செய்து, வலைதள கணக்கு முடக்கி வைத்து, அரிவாள் மற்றும் கைப்பேசியைப் பறிமுதல் செய்தாா்.

அவா் மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதிந்து தென்காசி நீதிமன்றத்தில் போலீஸாா் ஆஜா்படுத்தினா். 'சோஷியல்மீடியா பக்கங்களை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும், அமைதியை சீா்குலைக்கும் வகையில் புகைப்படம், வீடியோ, கருத்துகளை பதிவிடும் நபா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என எஸ்.பி., சுரேஷ்குமாா் எச்சரித்துள்ளாா்.

Tags:    

Similar News