செல்போன் கடை உரிமையாளருக்கு கத்தி குத்து வாலிபர் கைது 

கன்னியாகுமரி மாவட்டம், வடசேரி பகுதியில் செல்போன் கடை உரிமையாளரை கத்தி குத்திய வாலிபர் மீது வழக்குபதிவு செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Update: 2024-03-23 06:35 GMT

செல்போன் கடை உரிமையாளருக்கு கத்தி குத்து வாலிபர் கைது 

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில், வடசேரி பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் (28). இவர் ஒழுகினசேரி பகுதியில் செல்போன் கடை நடத்தி வருகிறார். சம்பவ தினம் இவரது கடைக்கு பெரிய விளை பகுதியை சேர்ந்த சுகுமாரன் (29)என்பவர் தனது நண்பர் ஒருவருடன் செல்போனுக்கு ரீசார்ஜ் செய்ய வந்தார்.

அப்போது கடையில் இருந்த கார்த்திக், சுகுமார் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு இதில் ஆத்திரமடைந்த சுகுமாரன் மறைத்து வைத்திருந்த கத்தி எடுத்து கார்த்திகை குத்தியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த கார்த்திக் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்து கார்த்திக் அளித்த புகாரின் பேரில் வடசேரி போலீசார் வழக்கு பதிவு செய்து சுகுமாரன் மற்றும் அவருடன் வந்தவரை தேடி வந்தனர். இதில் கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தபோது சுகுமாருடன் வந்தவர் கோட்டார் பகுதி சேர்ந்த முருகேஷ் கண்ணன் என்பது தெரிய வந்தது. அவரை நேற்று இரவு போலீசார் கைது செய்தனர். மேலும் சுகுமாரனை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News