முதியவரை தாக்கியவர் கைது

சேலம் மாவட்டம், தாதகாப்பட்டி அருகே முதியவரை தாக்கிய தொழிலாளியை காவல்துறையினர் கைது செய்தனர்.

Update: 2024-01-17 10:14 GMT

முதியவர் கைது

சேலம், எருமாபாளையம் பாலி ராமசாமி நகரை சேர்ந்தவர் பெருமாள் (வயது 78), விவசாயி. இவர் நேற்று முன்தினம் இரவு தாதகாப்பட்டியை அடுத்த ஒன்பதாம் பாலி பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த அதே பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி அருள் குமார் (26) என்பவருக்கும், பெருமாளுக்கும் மோட்டார் சைக்கிள் செல்ல வழிவிடுவது தொடர்பாக பிரச்சினை ஏற்பட்டு வாக்குவாதம் முற்றி கைகலப்பானது.

அப்போது ஆத்திரமடைந்த அருள் குமார் பெருமாளை அங்கிருந்த கட்டையால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த அவர் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இது குறித்து அவர் அளித்த புகாரின் பேரில் அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து அருள்குமாரை நேற்று கைது செய்தனர்.

Tags:    

Similar News