பெற்றோர் கண்டித்ததால் இளைஞர் தற்கொலை

மானாமதுரை அருகே பெற்றோர் கண்டித்ததால் இளைஞர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2024-06-21 09:57 GMT

தற்கொலை 

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே பதினெட்டாங்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் தேசிங்குராஜா (வயது 26), இவர் வேலைக்குச் செல்லாமல் மது குடித்து வந்துள்ளார். இதனை அவரது தந்தை கண்டித்ததாக கூறப்படும் நிலையில் மனமுடைந்த தேசிங்கு ராஜா விஷத்தைக் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து மானாமதுரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
Tags:    

Similar News